மதுரை: விதிகளை பின்பற்றி சாலை அமைக்கப்படுகிறதா என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பத்தறையைச் சேர்ந்த அந்தோணி முத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் விதிப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையின் மட்டம் உயரமாகியுள்ளன. இதனால், மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, குருந்தன்ேகாடு ஒன்றிய பகுதியில் நடந்த சாலைப் பணிகளை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யவும், பழைய சாலையை முழுமையாக அப்புறப்படுத்திய பிறகே, புதிய சாலைகள் அமைப்பதை உறுதிபடுத்தவும், இதன்பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.