லக்னோ: தடையை மீறி பட்டாசு விற்றதால் போலீசாரல் கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட தனது தந்தையை காப்பாற்ற, போலீசாரின் ஜீப்பில் தலையை முட்டிக் கொண்டு கதறி அழுத சிறுமி மீது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருவதால், டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி இம்மாநிலங்களில் சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. கடைகளில் பட்டாசுகளும் விற்கப்பட்டன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சார் மாவட்டத்தில் உள்ள குர்ஜா நகரில் உள்ள கடைத்தெருவில் கடந்த 12ம் தேதி ஒருவர் தடையை மீறி பட்டாசு விற்றார். அங்கு சோதனைக்கு வந்த போலீசார், அந்த நபரை அடித்து இழுத்துச் சென்றனர். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.