திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நவ.20ல் நடைபெறுகிறது. முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை கந்தசஷ்டி விழா சண்முகருக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வழக்கமாக சண்முகருக்கு காப்பு கட்டியவுடன் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ஏழு நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருப்பர். கொரானா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.