புதுடெல்லி: கடந்த மாதம் நடத்தப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.9,627 கோடி கடன் வாங்கிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்து, கடந்த 2ம் தேதி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.