ஜம்மு, ‘எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன்’ என்று தொண்டர்கள் முன்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசினார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பின்னர், ஜம்முவில் தேசிய மாநாட்டு கட்சி (என்சி) தலைவர் பரூக் அப்துல்லா, தனது கட்சி தொண்டர்களிடம் நேற்று பேசுகையில், ‘எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன். மக்களுக்காக ஏதாவது செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். எனது வேலையை முடிக்கும் நாளில்தான் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுவேன். ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதாக நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பினால், அவர்கள் 1947-ல் அவ்வாறு செய்திருப்பார்கள்.