புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய ‘தனிமை’ அமலில் இருந்த நிலையில், தற்போது அந்த முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தீவரம் அதிகமாக இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து மத்திய அரசால் அழைத்து வரப்பட்டவர்கள், சொந்த முறையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் தங்களது வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் இருந்தது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டில் இருந்து விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும், ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் உள்ளது.