கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 8ல் தொடங்கி டிசம்பர் 16ல் முடிகிறது. இந்நிலையில், முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 8ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 10ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் டிசம்பர் 14ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 16ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: