குடும்பத்தகராறு இளம்பெண் தற்கொலை

பூந்தமல்லி: வளசரவாக்கம், விஜயா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20), பிளம்பர். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அபிராமி (20), என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று அபிராமி, திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன்உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மணிகண்டன் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றபோது கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அபிராமி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அபிராமி தனது கணவனுக்கு உணவு தருவதற்கு நேற்று தாமதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் கேட்டதால் மன விரக்தியில் அபிராமி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. மணிகண்டன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: