சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: ஏடிஎம் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தபோதிலும் அவற்றை மறைத்தும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளையடித்தால் அது நடக்காது என்று எண்ணுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொது மக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுப்படுத்த வேண்டும். பிடிபட்டவர்களுக்கு உடனடியாக, கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்திருட்டில் ஈடுபட இருப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும்.