அபுதாபி: ஐபிஎல் 2020 தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத மூன்று அணிகள் 12 புள்ளிகளை பெற்று முடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் 4 இடத்தை பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் நான்கு இடத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இருக்கிறது. இதில் மும்பை 18 புள்ளிகளும், டெல்லி16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கடுத்து பெங்களூரும், ஹைதராபாதும் தலா 14 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.