ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது மும்பை போலீஸ்

மும்பை : ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் கைது செய்தது.  வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை வீட்டிற்கு வந்து தன்னை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் அழைத்துச் சென்றதாக அர்னாப் புகார் கூறுகிறார்.கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018ல் தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே அர்னாப் மீது புகார் உள்ளது. கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் அவர்களுக்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அன்வய் தற்கொலை என புகார் கூறப்படுகிறது.2019ல் முடிக்கப்பட்ட வழக்கை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் போலீஸ் மீண்டும் விசாரணையை தொடங்கியது. 

Related Stories: