திருவனந்தபுரம்: பழம்பெரும் பாடகரும், கர்நாடக இசைக்கலைஞரும், ஐயப்ப பக்தருமான கே.ஜே.ஏசுதாஸின் மகன் விஜய் ஏசுதாஸ். இவர் பக்திப்பாடல்கள் உள்பட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு தனது நண்பருடன் விஜய் ஏசுதாஸ் காரில் சென்று கொண்டிருந்தார். இரவு சுமார் 11.30 மணியளவில் ஆலப்புழா அருகே கார் ெசன்று கொண்டிருந்தது. துறவூர் அருகே கார் ெசன்றபோது, குறுக்கு சாலையில் இருந்து மற்றொரு கார் வேகமாக தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது.