குடியாத்தம்: தமிழக- ஆந்திர எல்லை, குடியாத்தம் அடுத்த சைனாகொண்டா சோதனைச்சாவடியில் நேற்று மதியம், தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குடியாத்தம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தினார். பின்னர், அவர், ஒரு மூட்டை வெங்காயத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினாராம். ஆனால், லாரி டிரைவர் இஸ்மாயில், கிளீனர் பைரோஸ் தர மறுத்தனர். இதையடுத்து, எஸ்ஐ செல்வம், அவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.