பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை டீ மாஸ்டர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜாகடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38). அதே பகுதியில் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனியாக வசிக்கும் ரமேஷ், வீட்டின் அருகே விளையாடிய பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: