மானூர்: மானூர் அருகேயுள்ள உக்கிரன்காேட்டை மாெட்டையனூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின் விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. ஆனாலும் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க அதிகாரிகள் முன்வராததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.