சென்னை: பம்மல் சார் பதிவாளர் அலுவகத்தில் கணக்கில் வராத ரூ.13,780 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளர் தினேஷ் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.13,780 சிக்கியது.