காஞ்சிபுரம்: அசாமில் வாகன விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரான காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி நங்கை. இவர்களது மகன் ஏகாம்பரம். கடந்த 2000ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவரது மனைவி குமாரி (35). இவர்களுக்கு ஆதித்யா (16), ஜெனி(14) என்ற மகன், மகள் உள்ளனர். சில மாதங்களில் ஏகாரம்பரம் பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி அசாமில் நடந்த சாலை விபத்தில் ஏகாம்பரம் மரணம் அடைந்தார். இறந்த ஏகாம்பரத்தின் உடல், நேற்று காலை 8 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.