திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்கு பின் இலவச தரிசன டோக்கன்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்துக்கு பின் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று முதல் தினமும் 3,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். தரிசனத்துக்கு முந்தைய தினம் டோக்கன் பெற வேண்டும். டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமலையில் அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சுமார் 3 மாதங்களாக இலவச தரிசன டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது.

Related Stories: