லக்னோ, :உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் ரமலா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி (50). இவர் சுமார் 6 அங்குல நீளத்தில் தாடி வளர்த்து வைத்திருக்கிறார். விதிமுறைபடி அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை பணியிடை நீக்கம் செய்து பாக்பத் மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாக்பத் மாவட்ட எஸ்பி அபிஷேக் சிங் கூறுகையில், ‘இந்த விஷயத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு, நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சீருடை அணிவதிலும் எஸ்ஐ இன்தஸார் ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளார். இரண்டு முறை அளித்த எச்சரிக்கையையும் அவர் மீறியுள்ளார்.