புதுடெல்லி: லடாக் எல்லையில் பிடிப்பட்ட சீன ராணுவ வீரரிடம் மொபைல் போன், தகவல் சேமிப்பு சாதனம், படுப்பதற்கான பொருட்கள் இருந்ததால், அவர் உளவு பார்க்க வந்திருக்க கூடுமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. லடாக் எல்லையில் டெம்சோக் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவ வீரர் வாங் யாங் லா, கடந்த 19ம் தேதி இந்திய ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் தனது எருமையை தேடி, வழி தவறி வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, அவருக்கு ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டது. பின்னர், சீன ராணுவமும் காணாமல் போன தனது வீரரை பற்றி இந்தியாவுக்கு தகவல் தெரிவித்தது.