ஹப்பூர், :உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் அடுத்த தானா கர் பகுதியில் கடந்த ஆக. 6ம் தேதி தனது வீட்டிற்கு வெளியே 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்ேபாது பைக்கில் வந்த குற்றம் சாட்டப்பட்ட தல்பத் என்பவன், அந்த சிறுமியைக் கடத்தி சென்று அன்றிரவு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். மயக்கத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தலிபதை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.