திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்தும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் விட மத்திய அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் நடத்தும் பொறுப்பை பெறும் டெண்டரில் அதானி குழுமமும், கேரள அரசின் சிறுதொழில் வளர்ச்சி கழகமும் கலந்து கொண்டன. ஆனால் இதில் அதானி குழுமம் முன்னிலையில் இருந்ததால் அதற்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.