காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில், இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. திமுக மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான வக்கீல் எழிலரசன் தலைமை தாங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் ராமு வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், மாவட்ட அவைத் தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.