சென்னை: தேர்தல் களத்தில் வெற்றி காண அயராது உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அதிமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: அதிமுக தொண்டர்களுக்கு 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகள். அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது.