காஞ்சிபுரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேரடியில் தொடங்கி பெரியார் நினைவுத்தூண் வரை மவுன ஊர்வலமும், பின்னர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கன்னிகா, சுமதி, புவனேஸ்வரி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இ.சங்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.உத்தரபிரதேசத்தில் இளம்பெண் படுகொலை விவகாரத்தில், சுயேச்சையாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.