சென்னை,:அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் கொடுத்து வருகிறது. இதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு இவர்கள் யார்?. இப்போது என்ஜினியரிங் படிக்க 4 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.4 லட்சம் தான் செலவு ஆகிறது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்தது என்றால், வருடத்திற்கு மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் செலவு ஆகும். இது முதல் கட்ட போராட்டம் தான்.