உ.பி.யில் தொடரும் கொடூரங்கள்.. ஹத்ராஸில் 4 வயது பிஞ்சு குழந்தை உறவினராலேயே பாலியல் பலாத்காரம்

லக்னோ : உ.பி மாநிலம் ஹத்ராஸில் 4 வயது சிறுமியை  சொந்த உறவினரே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஹத்ராஸில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். அவரது உடல் பெற்றோர்களின் சம்மதம் இன்றி, இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. பெற்ற மகளின் முகத்தை கூட பார்க்க விடமால், உடல் தகனம் செய்யப்பட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ஹத்ராஸ், சஸ்னி பகுதியில் வசித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் உறவினரே பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: