காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் பகுதியில் நின்றுபோன நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இந்த திட்டம் சில பகுதிகளில் ஆறு வழிச்சாலையாகவும், சில பகுதிகளில் நான்கு வழி சாலையாக காணப்படுகிறது. தற்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வெள்ளைகேட் வரை தேசிய நெடுஞ்சாலையினர் ஆறு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிலங்கள் கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.