நேபாளம்: நேபாள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளாம் கொரோன வைரஸ் தொற்று இல்லாத நாடு என கடந்த 8 மாதங்களுக்கு முன்பு யோகேஷ் பத்தராய் அறிவித்து இருந்த நிலையில், அவருக்கே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் யோகேஷ் பத்தராய் பதிவிட்டுள்ளார்.