பாரிஸ்: பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு முதல்முறையாக பல புதுமுகங்கள் தகுதிப் பெற்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ்பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஒன்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா(3வது ரேங்க்), அர்ஜென்டீனா வீராங்கனை என் நாடியா போடோரோஸ்கா(131வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய நாடியா 6-2, 6-4 என நேர் செட்களில் எலினாவை எளிதில் வீழ்த்தினார். இதன்மூலம் பிரஞ்ச் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறும் எலினா ஸ்விடோலினா கனவு 3வது முறையாக கலைந்துள்ளது.
மற்றொரு காலியிறுதியில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்(54வது ரேங்க்), இத்தாலியின் மார்டினா டிரெவிசன்(159வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் இகா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மார்டினாவை மண்ணை கவ்வ வைத்தார். இந்த வெற்றியின் மூலம் 19வயதான இகா அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் நாடியா-இகோ விளையாட உள்ளனர்.