தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

டெல்லி: தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது. நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறது. 88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: