திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றால் விபத்து அபாயம் நிலவுகிறது. தடுப்புவேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் இருந்து திருப்புத்தூர் வழியாக மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பில்லமங்கலம் விலக்கு பகுதியில் சாலையோரம் கிணறு உள்ளது. மதுரை, மேலூர், சிவகங்கை, திருப்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து கீழச்சிவல்பட்டி, திருமயம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாகவே செல்ல வேண்டும்.