தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இந்தியாவில் அதிக ஆபத்து: ஐநா வேதனை

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஹத்ராஸ் சம்பவம் ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. சமூக, பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பெண்கள் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிய வைத்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் தலித் பெண்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இந்தியாவின் அவசரத்தேவையாகவும் உள்ளது.’  என ஐநா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Related Stories: