மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து 2015ல் ஓய்வு பெற்ற சுப்பையா, தனக்கு 2009 முதல் 2013 வரையிலான விடுமுறை ஒப்படைப்பு பணம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட நிதி ஆகியவற்றை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நேற்று விசாரித்தார். போக்குவரத்து கழக வழக்கறிஞர், ‘‘போக்குவரத்து கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால் மனுதாரர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்கப்படவில்லை’’ என தெரிவித்தார்.