திருவனந்தபுரம், :கேரளாவில் இடது முன்னணி ஆட்சி காலாவதிக்கு முன்பு அரசு நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுகின்றனர்.கேரளாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினசரி ஊதியத்தில் பணிபுரிகின்றனர். 3 முதல் 10 ஆண்டுகளாக பல்வேறு அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானவர்களை நிரந்தர ஊழியர்களாக்கும் செயல்முறை இப்போது பல்வேறு கட்டங்களில் உள்ளன.