சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவரை 8 பேர் கொண்ட ஓட ஓட விரட்டிவெட்டி படுகொலை செய்தது,. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ்(45) இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக இருந்தார். இவர் சென்னை பெரம்பூர் பட்டியல் சாலையில் அலுவலகம் வைத்திருந்தார். இவர் நேற்று வில்லிவாக்கம் மோகன் ரெட்டி மருத்துவமனையின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரை வழி மடக்கி சரமாரியாக கத்தியால் வெட்டினர். அப்போது வலி தாங்க முடியமால் ஒட முயற்சித்த போது அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். உடனே வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.