காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையின் பகுதிநேர முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித்தேர்வு கல்லூரி கருத்தரங்க அறையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முனைவர் பட்ட மாணவரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கல்லூரி நிறுவனர் பா.போஸ், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.