சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லையே, இதில் உள்நோக்கம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அரசின் பிரதான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது துணை முதல்வரின் பெயர் இருக்கும். ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி என்பது சென்னை மண்டலத்திற்கு உட்பட்டது. அதனால்தான் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்ட நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை.