அதிமுக முதல்வர் வேட்பாளர் 7ம் தேதி அறிவிக்கப்படுவாரா? அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பல்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லையே, இதில் உள்நோக்கம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். அரசின் பிரதான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது துணை முதல்வரின் பெயர் இருக்கும். ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி என்பது சென்னை மண்டலத்திற்கு உட்பட்டது. அதனால்தான் அவரது பெயர் இடம் பெறாமல் இருந்தது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்ட நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை.

அதிமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் துணை முதல்வர் கட்சி வேலைகளை செய்து கொண்டிருந்தார். அதனால் அவர் தலைமை செயலகத்தில் நடந்த கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வரவில்லை. கேள்வி: திட்டமிட்டபடி வரும் 7ம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? பதில்: தலைமைக்கழகம் எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் என்னால் பதில் சொல்ல முடியும். எனவே பொறுத்திருந்து பாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: