மத்திய அமைச்சருக்கு நன்றி கூறி சிக்கினார்!!..என்ன மேடம் ‘புல்’ போதையா? : 'நாகினி'நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

மும்பை, :மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன நடிகையை, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல நடிகை மவுனி ராய், மாலத்தீவில் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனது 35வது  பிறந்த நாளை கொண்டாடினார்.

இவருக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர், ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த ‘லண்டன் கான்பிடன்ஷியல்’ என்ற திரைப்படம் ஆன்லைன் தளத்தில் ரிலீஸானது. இந்நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நடிகை மவுனி ராய் நன்றி தெரிவித்தார். ஆனால், தவறாக ஒரு டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு இணையவாசிகளின் ட்ரோலில் சிக்கி உள்ளார்.

அதாவது மீடியா பர்சனாலிட்டியான ராஜ் நாயக் என்பவர் நடிகை மவுனி ராய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவருக்கு நன்றி கூறுவதற்கு பதிலாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அதில், ‘என்ன மவுனி ராய் மேடம் ‘புல்’ போதையா? என்சிபி (போதை பொருள் தடுப்பு பிரிவு) உங்களுடைய லொகேஷனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்! அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து சொல்லும் அளவுக்கு நீங்கள் இன்னும் வளரவில்லை’ என்று பலவாறாக கலாய்த்து வருகின்றனர்.

Related Stories: