ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவம் விரட்டியடித்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்குள் பனிக்காலத்துக்கு முன்பாக அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. தற்போது, எல்லையில் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் போர் தந்திரத்தில் சீனாவும் இறங்கியுள்ளது. இதற்காக, அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜம்மு எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளின் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது.