புதுடெல்லி: தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர சிறப்பு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் நீட் -2020 தேர்வின் அடிப்படையில் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்.