புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில்,‘‘நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் காவல் நிலையத்தின் உள்ளே நடக்கும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்கள் அனைத்தும் உன்மையாக வெளிவரும்.