புதுடெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தவற விட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டது. அதேபோன்று ஜே.இ.இ தேர்வு கடந்த 1 முதல் 6ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனோ வைரஸ் தொற்று காரணத்தினால் மேற்கண்ட தேர்வுகளை எழுதாமல் பல மாணவர்கள் தவற விட்டனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீத மாணவர்கள் தற்போது நீட் தேர்வை எழுதவில்லை. இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளது.