டெல்லி : நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை சுமார் 18 நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர். இதனிடையே திமுக எம்பி திருச்சி சிவா நிருபர்களிடம் கூறும்போது, சுமார் 12 ஆண்டுகளாக கற்றக் கல்வி அறிவை தூர எரிந்து விட்டு வெறும் 3 மணி நேரம் மட்டும் தேர்வு என்ற முறையில் சோதித்து மருத்துவக் கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்வது ஏற்கக்கூடியது இல்லை. மேலும் பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? .தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களால் முடிவதில்லை.