டெல்லி: கொரோனாவுக்கு ஓமியோபதி, சித்தா மருந்துகளை பயன்படுத்துவது குறித்து அரசு பரீசிலிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கூறியுள்ளார். இந்திய மருத்துவ முறைகள் பற்றி போதிய அளவு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.