டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. நடைபயிற்சி, யோகா, சுவாசப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் மது அருந்துவது புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.