ஜெனீவா: மத சிறுபான்மையினரை ஒடுக்க பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது என ஐ.நாவில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் மத சிறுபான்மையினருக்கு அவர்கள் தன்னிச்சையாக நடந்துகொள்வது குறித்து மதிப்பீடு செய்ய பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது என கூறியுது. மத சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மீறுவதற்கு பாகிஸ்தான் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் இந்தியா மீண்டும் எடுத்து கூறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்தியதற்காக இந்தியா வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்ததாக இந்திய ஆலோசகர் பவுலோமி திரிபாதி கூறினார்.