திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் நெற்பயிர்களை மூழ்கடித்த வயலில் தண்ணீரை இன்ஜின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் குறுவை சுமார் 7,200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சம்பா சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு நடைபெற்று உள்ளது. தற்போதைய மழையினால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் பயிர்முளைத்துள்ளது.