வாலாஜாபாத்: ஆடு மேய்த்த பெண்ணை கொலை செய்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். வாலாஜாபாத் அடுத்த தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் இவரது மகள் சாந்தி (49) திருமணமாகாதவர். இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆடு, மாடுகளை அதே பகுதியில் மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்புஆடு மேய்க்கச் சென்ற சாந்தி மாலை வரை வீடு திரும்பவில்லை என வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பெண்டை சாலையில் முட்புதரில் பெண்சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் இறந்தவர் இப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்கும் சாந்தி என தெரியவந்தது.