இதையடுத்து போலீசார், அங்கு நடத்திய சோதனையில் மலை பகுதிகளில் பாறைகளின் இடுக்கிலும், பூமிக்குள்ளும் புதைத்து பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்தனர். பின்னர், அவற்றை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை உடைத்து அகற்றினர். சாராயம் காய்ச்சுவதை நிரந்தரமாக ஒழிக்க போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.