அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் நேற்று அல்லேரி சுற்றியுள்ள மலை பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் வருவதை தெரிந்து கொண்ட சாராயம் காய்ச்சும் நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார், அங்கு நடத்திய சோதனையில் மலை பகுதிகளில் பாறைகளின் இடுக்கிலும், பூமிக்குள்ளும் புதைத்து பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்தனர். பின்னர், அவற்றை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை உடைத்து அகற்றினர். சாராயம் காய்ச்சுவதை நிரந்தரமாக ஒழிக்க போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: